අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාගේ ‘සෞභාග්ය දැක්ම’ ප්රතිපත්ති ප්රකාශනයට අනුව ක්රියාත්මක වන ‘හරිත දැයක්’ ගෙවතු වගා සංග්රාම ජාතික වැඩසටහනේ බදුල්ල දිස්ත්රික් සමාරම්භක උළෙල අද දින බදුල්ල උතුර ග්රාම නිලධාරී වසමේ ‘සේවා පියස’ පරිශ්රයේදී පෙරවරු 9.18ට යෙදී තිබෙන සුභ මොහොතේදී ආරම්භ කරන ලදී.
“වසවිසෙන් තොර පෝෂණයෙන් සපිරි නැවුම් එළවළු හා පළතුරු, පළාවර්ග, අල වර්ග ඇතුළු බෝග ගෙවත්තෙන් සපයා ගැනීමේ හා නිරෝගීමත් පවුල් ඒකක ඇති කිරීමේ සංකල්පය” අරමුණු කොට ක්රියාත්මක දීප ව්යාප්ත වැඩසටහනට සමගාමීව පවත්වන ලද මෙම උත්සවයේ දී බීජ පැකට් බෙදා හැරීම, බෝග වර්ග බෙදා හැරීම හා සිටුවීම ක්රියාත්මක කරන ලදී.
දැනට ගෙවතු වගාවේ නියැලෙන පවුල් ඒකක ලක්ෂ 22ක් ඉලක්ක කොට ගනිමින් දිවයින පුරා සියලුම ග්රාම නිලධාරී වසම් ආවරණය වන පරිදි මෙම වැඩසටහන ක්රියාත්මක කිරීමට නියමිතය. ‌මේ වැඩසටහන යටතේ බදුල්ල දිස්ත්රික්කයේ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස 15 තුළ පවුල් 83517 ක් වෙත ගෙවතු වගාවට අවශ්ය බීජ සහ පැළ ලබාදීමට සැලසුම් කර තිබේ.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, බදුල්ල නගරාධිපති ප්රියන්ත අමරසිරි මැතිතුමා, බදුල්ල ප්රාදේශීය ලේකම් හේමන්ත දිසානායක, දිස්ත්රික් සමෘද්ධි අධ්යක්ෂ ඩබ්.එම්.පී.විජයබණ්ඩාර මහතා, නියෝජ්ය අධ්යක්ෂ (ක්රමසම්පාදන) කේ.එස්.බී.සේනානායක මහතා යන මහත්වරුන් ඇතුලු රාජ්ය නිලධාරීන් සහ ගම්වාසීන් පිරිසක් එක්ව සිටියහ.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப்பிரகடனத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் ‘பசுமையானதொரு தேசம்’ தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைத்திட்டத்தின் பதுளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் பதுளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவின் ‘சேவா பியச’ வளாகத்தில் காலை 9.18 எனும் சுபநேரத்தில் இடம்பெற்றது.
“நச்சுத்தன்மையற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகளை வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்தல் உட்பட ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குதல்’ எனும் இலக்குகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விதைகள் விநியோகம், பயிர் செடிகள் வழங்கல் மற்றும் பயிரிடல் ஆகியன இடம்பெற்றன.
தற்பொழுது வீட்டுத் தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள 22 இலட்சம் குடும்பங்களை இலக்காகக்கொண்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் காணப்படும் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 83,517 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்குத் தேவையான விதைகள் மற்றும் செடிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிறி, பதுளை பிரதேச செயலாளர் ஹேமந்த திஸாநாயக, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் டபிள்யூ.எம்.பி.விஜயபண்டார, பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) கே.எஸ்.பி சேனாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், கிராமவாசிகள் கலந்துகொண்டனர்.