බොරලන්ද සිට හෝර්ටන්තැන්න දක්වා ඔහිය ප්රදේශයේ සිදු කෙරෙන අනවසර ඉදිකිරීම් නැවැත්වීමට වහාම පියවර ගන්නා ලෙස ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා අදාළ නිලධාරීන්ට දැනුම් දුන්නේය.
ඔහිය ප්රදේශයේ සිදුකර තිබෙන ඉදිකිරීම් නිසා ඒ ආශ්රිතව දැඩි පරිසර විනාශයක් සිදුව ඇති බව තමාට නිරික්ෂණය වූ බව පැවසූ ජනාධිපතිවරයා එම තත්ත්වය වහා වළක්වා නොගතහොත් ඉදිරියේදී දැඩි ගැටලුකාරී තත්ත්වයකට මුහුණදීමට සිදුවන බවද පෙන්වා දුන්නේය.
ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා මේ බව සඳහන් කර සිටියේ ඌව පළාත් පුස්තකාල ශ්රවණාගාරයේ පැවති බදුල්ල දිස්ත්රික් විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමට එක්වෙමිනි.
එසේම දිස්ත්රික්කයේ ගොඩනැගිලි සැලසුම් අනුමත කරන විට ඊට අදාළ නිර්නායක අනුව ක්රියා කරන ලෙස අදාළ ආයතනවලට ලිඛිතව දැනුම් දෙන ලෙසද ජනාධිපතිවරයා මෙහිදී නිලධාරීන්ට උපදෙස් දුන්නේය.
බදුල්ල දිස්ත්රික්කයේ ආපදාවට ලක් වූ ජනතාවට සහන සැලසීමට ගෙන යන වැඩපිළිවෙළ පිළිබඳවද විමසා සිටි ජනාධිපතිවරයා ඉදිරියේදි ආපදාවට ලක්විය හැකි ප්රදේශ පිළිබඳව සම්පූර්ණ විස්තරයක් තමා වෙත ඉදිරිපත් කරන ලෙස නිලධාරීන්ට දැනුම් දුන්නේය.
අවතැන් වූ ජනතාව නැවත පදිංචි කිරීමේදී මතුව ඇති ගැටලු පිළිබඳව නිලධාරීන් මෙහිදී කරුණු ඉදිරිපත් කළ අතර වතු සමාගම්වලින් ඉඩම් නීත්යානුකූලව නිදහස් කර ගැනීමේදී මතුව ඇති බාධා පිළිබඳව ද සාකච්ඡාවට ලක් කෙරිණි. ඒ පිළිබඳ වැවිලි සමාගම් සමඟ සාකච්ඡා කර එම කටයුතු කඩිනමින් නිම කිරීමට ජනාධිපතිවරයා මෙහිදී නිලධාරීන්ට වැඩිදුරටත් උපදෙස් දුන්නේය.
බදුල්ල දිස්ත්රික්කයේ දේශපාලන අධිකාරිය මෙන්ම රාජ්ය නිලධාරීන්ද එක්ව සිටි මෙම සාකච්ඡාවේදී දිස්ත්රික්කයේ අධ්යාපන, සෞඛ්ය, මහාමාර්ග, ප්රවාහන ඇතුළු විවිධ ක්ෂේත්රයන්හි මතුව ඇති ගැටළු පිළිබඳ දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරුණු අතර ඇතැම් ගැටළුවලට එම අවස්ථාවේම විසදුම් ලබාදීමට ජනාධිපතිවරයා පියවර ගත්තේය.
එසේම බදුල්ල දිස්ත්රික්කය තුළ 2024 දී ක්රියාත්මක කිරීමට නියමිත සංවර්ධන සැලසුම් පිළිබඳවද මෙහිදී විමසා බලන ලදි.
ලබන වසරේ සිට විමධ්යගත අයවැය දිස්ත්රික්කවලට ලබාදෙන බවත් කඳුරට සංවර්ධන වැඩසටහන, අමාත්යංශවලට වෙන් කර ඇති මුදල්, පළාත් සභාවලට ලබා දෙන මුදල් මෙන්ම විදේශ ආධාර මත ක්රියාත්මක ව්යාපෘතිවලට ලැබෙන මුදල් යන සියල්ල එක් කරගනිමින් දිස්ත්රික්කයේ සංවර්ධන අවශ්යතාවලට ප්රමුඛත්වය ලබාදී සංවර්ධන වැඩකටයුතු ඉදිරියට කරගෙන යාමට එමගින් හැකියාව ලැබෙන බව පැවසූ ජනාධිපතිවරයා ලබන වසරේ ජූලි මාසය වන විට එම කටයුතු ආරම්භ කිරීමට සැලසුම් කර ඇති බවද සඳහන් කළේය.
අමාත්යවරුන් වන නිමල් සිරිපාලද සිල්වා, හරින් ප්රනාන්දු, රාජ්ය අමාත්යවරුන් වන චාමර සම්පත් දසනායක, අරවින්ද කුමාර්, පාර්ලිමේන්තු මන්ත්රී සහ බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති මේජර් සුදර්ශන දෙනිපිටිය, ජනාධිපති ජ්යෙෂ්ඨ උපදේශක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී වඩිවෙල් සුරේෂ්, ඌව පළාත් සභාවේ සභාපති ඒ.එම්. බුද්ධදාස යන මහත්වරු ඇතුළු දිස්ත්රික්කයේ දේශපාලන නියෝජිතයන් ද ජනාධිපති ලේකම් සමන් ඒකනායක, බදුල්ල දිස්ත්රික් ලේකම් පණ්ඩුක ශ්රී ප්රභාත් අබේවර්ධන යන මහත්වරු ඇතුළු රාජ්ය නිලධාරින් ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
ஒஹிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்களால் பாரிய சுற்றாடல் அழிவுகள் ஏற்பட்டுள்ளதை தாம் அவதானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையை உடனடியாகத் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், மாவட்டத்தின் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது உரிய அளவுகோல்களுக்கு அமைய செயற்படுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்த முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து காணிகளை சட்டப்பூர்வமாக விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.இது தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி பணிகளை விரைந்து முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வீதிகள், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் ஒரு சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அடுத்த வருடம் முதல் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் எனவும், மலையக அபிவிருத்தித் திட்டம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் வெளிநாட்டு உதவியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் இருந்து பெறப்பட்ட நிதி என்ற அனைத்து நிதியையும் இணைத்து மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் குறித்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச உட்பட மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.