පළාත් පාලන ආයතනයන්හි පුරවැසි ප්රඥප්ති සකස්කිරීම සහ පෙරටු කාර්යාල ඔස්සේ සේවා සැපයීමේ ක්රමවේදය යාවත්කාලීන කිරීම සම්බන්ධව පළාත් පාලන ආයතන ප්රධානීන් දැනුවත් කිරීමේ වැඩසටහනක් අද දින හාලි ඇල විදේශ සේවා නියුක්ත කාර්යාලයේ ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
මෙහිදී අතිගරු ජනාධිපතිතුමාගේ සංකල්පය අනුව, පළාත් පාලන ආයතනවල් වලින් නව තාක්ෂණය උපයෝගී කරගෙන මාර්ගගත ක්රමය ඔස්සේ මහජනතාවට ගුණාත්මක හා කාර්යක්ෂම සේවාවක් ලබාදීම හා පෙරටු කාර්යාල සේවා සැපයීම පුළුල් කිරීම සම්බන්ධව කරුණු ඉදිරිපත් කළ අතර, පළාත් පාලන සේවා ඩිජිටල්කරණය කිරීමේ ඌව පළාත් ව්යාපෘතියේ ප්රගතිය ද ඉදිරිපත් කරන ලදී.
මෙම අවස්ථාවට බදුල්ල නගරාධිපති ප්රියන්ත අමරසිරි මැතිතුමා, බණ්ඩාරවෙල නගරාධිපති ජනක නිශාන්ත රත්නායක මැතිතුමා, බණ්ඩාරවෙල ප්රාදේශීය සභාවේ සභාපති පූජ්ය කරගහවෙල නන්දවිමල හිමි ඇතුළු සියලුම ප්රාදේශීය සභාවල සභාපතිවරුන්, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් පාලන හා ප්රාදේශීය සභාවල්වල ලේකම්වරුන්, CDLG/UNDP ව්යාපෘති සම්බන්ධීකාරක සිහාන් සරූක් මහතා ඇතුළු UNDP ආයතනයේ නිලධාරීන් ඇතුළු රාජ්ය නිලධාරීන් එක්ව සිටියහ.
உள்ளுராட்சி மன்றங்களில் பிரஜைகளுக்கான நீதிச் சட்டம் (மசோதா) மற்றும் அலுவலக வரவேற்பறை சேவை வழங்கும் முறைகளைப் புதுப்பித்தல் தொடர்பாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கு இன்றைய தினம் ஹாலிஎல வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக பொதுமக்களுக்குத் தரமான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை வழங்குதல் மற்றும் அலுவலக வரவேற்பறை சேவைகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட அதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதன் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பதுளை நகர மேயர் பிரியந்த அமராசிரி, பண்டாரவளை நகர மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவெல பிரதேச சபை தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர் உள்ளிட்ட பிரதேச சபைத் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், CDLG/UNDP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக் உள்ளிட்ட UNDP நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.