නිදහස් දින පණිවිඩය

යටත් විජිතවාදයෙන් නිදහස ලබා ස්වාධීන දේශයක් ලෙස නිදහස් ගමනක් අරඹා 74 වසරක් සැපිරීම අප මෙම වසරේදී සමරනු ලබයි. තිස් වසරකට ආසන්න කාලයක් ලක් මවට සිය දුවා දරුවන් අහිමිකරමින් ඇවිළී ගිය රුදුරු ත්රස්ථවාදයේ ගිණිදැල් නිවාලමින් නිදහසේ අරුණැල්ල මේ දෙරණට උදාකළ අභීත රණවිරුවන් ද මා මෙම අවස්ථාවේදී සිහිපත් කරනුයේ කෘතඥතා පූර්වක ගෞරවය පෙරදැරිවයි.
 
සිංහල, දෙමළ, මුස්ලිම්, බර්ගර් ආදී විවිධ ජන වර්ග සිය සංස්කෘතික අනන්යතාවයන් හා ආගමික අවේණිකතාවයන් රැකගනිමින් වාර්ගික ඒකීයත්වයෙන් හා ආගමික සංහිදියාවෙන් අප දේශයක් ලෙස ගමන්ගත් දුර බොහොමයි. අප එකිනෙකා වෙන් වූ විට කඩා වැටුනේ යම් සේද ඊට වඩා දසදහස් වරක් ශක්තිමත්ව, සියළු බේද දුරැර දා එක් ජාතියක් ලෙස අත්වැල් බැද නැගී සිටියෙමු. කළින් කළට දේශපාලනික, සාමාජයීය හා ආර්ථික වශයෙන් අප වෙත ආ සුළි කුණාටු හමුවේ අප නොසැලී සිටියේ එක මවකගේ දරුවන් සේ අප එකිනෙකා කෙරෙහි තැබූ විශ්වාසයේ ශක්තියෙනි. නිදහසේ 74වන සැමරුම් අවස්ථාවේදී ජාතියක් ලෙස අපේකම හමුවේ ඇති ඒ එකමුතු බව තව තවත් වර්ධනය වේවායි මම ප්රාරාර්ථනා කරමි.
 
තිරසර සංවර්ධනයක් මත ගොඩනැගෙන ශ්රී ලංකාවක්, නිරෝගිමත් පරපුරක්, නව්යකරණයෙන් ලොව ජයගන්නා තරුණ ප්රජාවක් ඉලක්ක කරමින් අතිගරු ජනාධිපතිතුමන් විසින් දූරදර්ශී නායකත්වය තුළ ක්රියාවට නංවන ”සෞභාග්යයේ දැක්ම”, නිදහස් ශ්රී ලංකාවේ සාර්ථක අනාගතයට බිහි දොර නිර්මාණය කර දෙනු නියතය. එබැවින් එය යථාර්තයක් බවට පත් කර ගැනීමට අප සියළු දෙනා කැප විය යුතු යැයි මා විශ්වාස කරමි.
 
ඔබ සැමට සුබ නිදහස් දිනයක් වේවා !…
 
ඒ.ජේ.එම්. මුසම්මිල්,
ඌව පළාත් ආණ්ඩුකාරවර
04-02-2022

சுதந்திர தின செய்தி

 
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதொரு தேசமாக எமது சுதந்திர பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் 74 ஆவது அகவையை அனுஷ்டிக்கின்றோம். சுமார் 30 வருடங்கள் எமது தாயகத்தின் குழந்தைகளைப் பலியெடுத்து, பற்றியெறிந்த தீவிரவாத தீப்பிழம்பை அனைத்து சுதந்திர தேசத்தை உதயமாக்கிய துணிச்சல் மிக்க இராணுவத்தினரையும் இந்நொடியில் நன்றியுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.
 
சிங்களம், தமிழ், முஸ்லிம், பேர்கர் போன்ற பல்லின மக்கள் தத்தமது கலாச்சார மரபுரிமைகளையும் சமய ரீதியிலான அடையாளங்களையும் பாதுகாத்து நல்லிணக்கத்துடன், ஒரே தேசம் என்ற வகையில் வெகு தூரம் பயணித்துள்ளோம். நாம் ஒருவருக்கொருவர் அவ்வப்போது முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், அதை விட பத்து மடங்கு வலுவாக முன்னோக்கி நகர்ந்து அனைத்து வேறுபாடுகளையும் ஓரங்கட்டிவிட்டு ஒரே தேசமாகக் கைகோர்த்து எழுந்து நின்றோம். காலத்திற்குக் காலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எம்மை நோக்கி வீசிய புயலுக்கு மத்தியில் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற வகையில் நம்பிக்கையோடு நாம் அசையாதிருந்தோம். அதேபோன்று 74 ஆவது சுதந்திர தின ஞாபகார்த்தத்தின் போதும் ஒரே இனம் என்ற வகையில் எமது தனித்துவத்தின் மீது காணப்படும் ஒற்றுமை மென்மேலும் வளரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் இலங்கையில், ஆரோக்கியம் நிறைந்த சந்ததியினர், புத்துணர்ச்சியுடன் உலகை வெல்லும் இளம் சமுதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் தொலைநோக்குடன் நடைமுறைப்படுத்துகின்ற ‘சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கையானது சுதந்திரமான இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுப்பது நிச்சயம். அதனை யதார்த்தமாக்குவதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என நம்புகின்றேன்.
 
உங்கள் அனைவர்க்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…
 
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்
04-02-2022