රටක් ලෙස සියලු ජාතීන් එක්ව එක් ධජයක සෙවනේ“අපි ශ්රී ලාංකිකයෝය” යන ආකල්පයෙන් පෙළ ගැසී දිනා ගත් නිදහසේ, 76 වන සංවත්සරය අදට යෙදී තිබේ.
1948 නිදහස දිනාගැනීමට අපට හැකි වූයේ සියලූ භේද අමතක කොට එක්සත්ව, එක්සිත්ව එකම ශ්රී ලාංකේය ජනතාවක් ලෙස ජාතික සමගියෙන් යුතුව කටයුතු කිරීම නිසා බව අප කිසිසේත් අමතක කළ යුතු නැත.
අද වන විට අපගේ මව් රටට අවශ්යව ඇත්තේ ලැබූ නිදහස අර්ථවත් කර ගැනීමේ ක්රියාවලියයි. ජාතීන් අතර සමගිය වර්ධනය කර ගැනීම හා ආගමික සංහිඳියාව ඇති කිරීම ඒ සදහා දක්වන්නේ ප්රබල පිටුබලයක් ලබා දෙන බව මාගේ විශ්වාසයකි.විවිධ අභියෝග හමුවේ දේශීයත්වය අගයන ආර්ථික ප්රතිපත්තියක් තුළින් මව් රට සංවර්ධනය කරා ගෙන යාමේ මාවතට අප දැන් ප්රවිශ්ඨ වී සිටින්නෙමු.
පසුගිය වසර පුරා අපමණ වූ දුෂ්කරතාවලට මුහුණ දෙමින් අනේක විධ කැපවීම් තුලින් ලබාදුන් අමිල සහයෝගය හමුවේ රට බංකොලොත්භාවයෙන් මුදා ගැනීමේ දිශානතියට ගමන් කිරීමේ මූලික පියවර තැබීමට ගරු ජනාධිපතිතුමා ප්රමුඛ රජයට හැකි විණි. නමුත් ආර්ථික ස්ථාවරත්වය තහවුරු කර ගැනීම උදෙසා තවත් යා යුතු දුර බොහෝ වේ. එය අභියෝගාත්මක දුෂ්කර ගමනකි.ලක් දූ පුතුන් ලෙස මෙතෙක් ආ ලෙසට එම දුෂ්කර ගමන් මගෙහි එකාසේ ගමන් කර රට යළි ගොඩ නැංවීම වෙනුවෙන් ඉටු කළ යුතු ඒ වගකීම හදුනාගනිමින් නිසි ලෙස ඉටු කිරීම අප සතු කාර්යයකි.
අපගේ නිදහස වඩාත් අර්ථවත් කරලීම උදෙසා ඒ උදාර අරමුණ වෙනුවෙන් කැපවීමට අද දිනයේ අපි සැම අදිටන් කර ගනිමු
ඔබ සියලූ දෙනාට නිදහස් දින උණුසුම් සුභ පැතුම්!
ඒ.ජේ.එම්. මුසම්මිල්,
ඌව පළාත් ආණ්ඩුකාරවර
04-02-2024
ஒரு நாடு என்ற வகையில் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து ஒரு கொடியின் கீழ் ‘நாம் இலங்கையர்கள் ஆவோம்’ என்ற கோட்பாட்டுடன், வென்றெடுத்த சுதந்திரத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்.
அனைத்து பேதங்களையும் மறந்து ஒரே நிலைப்பாட்டுடன், அனைவரும் ஒற்றுமையுடனும் இலங்கை மக்கள் என்ற சிந்தனையோடும் செயல்பட்டதனாலேயே 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை எம்மால் வென்றெடுக்க முடிந்தது என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது.
பெற்ற சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதே இந்த நாட்டின் தற்போதைய கட்டாயத்தேவையாகும். இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளல் மற்றும் மத ரீதியிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பன அதனை மேலும் மெருகூட்டும் என்பது எனது ஏக எதிர்பார்ப்பாகும். பல சவால்களுக்கு மத்தியில் உள்ளூர்வாதத்தை மதிக்கும் பொருளாதாரக் கொள்கையின் மூலம் தாய் நாட்டை அபிவிருத்தி என்னும் பாதையில் முன்னோக்கி கொண்டுசெல்லும் இலக்கில் நாம் தடம் பதித்துள்ளோம்.
கடந்த வருடம் முழுவதும் இன்னோரன்ன கஷ்டங்களை எதிர்நோக்கி பல்வேறுபட்ட அர்பணிப்புக்கள் மூலமாக வழங்கப்பட்ட அளப்பரிய ஒத்துழைப்புக்கு மத்தியில், வங்குரோத்து நிலையில் காணப்பட்ட நாட்டை அந் நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முதல் தடையினை வெற்றிகொள்ள அதிமேதகு ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு முடிந்தது. என்றாலும் பொருளாதார நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அது ஒரு இலகுவான பயணம் அல்ல. இலங்கை தாயின் பிள்ளைகள் என்ற வகையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை நன்கு அறிந்து அவற்றை சரியான முறையில் நிறைவேற்றவேண்டியது எமது கடமையாகும்.
எமது சுதந்திரத்தை மேலும் அர்த்தமூட்டுவதை நோக்கமாக கொண்டு, நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற இன்றைய தினத்தில் நாம் உறுதிபூணுவோம்.
உங்கள் அனைவருக்கும்; சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!…
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்
04-02-2024