ඌව පළාත් කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව මගින්, බණ්ඩාරවෙළ බිදුණුවැව සංස්කරණ අභ්යාස ආයතනයේදී පවත්වන ලද කෘෂි තාක්ෂණික ප්රදර්ශනයට සහභාගිවූ අවස්ථාව …
‘විධිමත් පුහුණු තුළින් කෘෂිකාර්මික සංවර්ධනය’ යන දැක්ම යටතේ ඌව පළාතට උචිත තාක්ෂණික පුහුණුව ලබාදීම තුළින් ගොවි ජනතාවගේ කෘෂිකාර්මික දැනුම, කුසලතා හා ආකල්ප වැඩි දියුණු කර ඔවුන්ගේ කෘෂිකාර්මික නිෂ්පාදන වැඩිදියුණු කිරීම තුළින් ජීවන තත්වය නගා සිටුවා කෘෂිකර්මය සංවර්ධනයට දායක වීම යන මෙහෙවර ක්රියාත්මක කිරීම සදහා කෘෂි තාක්ෂණ ප්රදර්ශනය පැවැත්විය.
මෙම ප්රදර්ශන භුමියේ පළතුරු වගාව, මල් වගාව, එළවළු වගාව, පැළ තවාන්, පටක රෝපණය, කාබනික නිෂ්පාදනය, ආරක්ෂිත බෝග වගාව, ගව පාලනය, ගෙවතු වගාව, පටක රෝපණ හා බිම්මල් නිෂ්පාදන රසායනාගාරය, බිං අර්තාපල් නිෂ්පාදන අංශය, කුකුල් පාලනය, පාංශු රසායනය යන අංශ පිළිබදව දැනුම ආකල්ප ලබාදීම සදහා ප්රදර්ශන හා වැඩසටහන් රැසක් පැවැත්විය.
මෙම අවස්ථාවට, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය, ඌව පළාත් කෘෂිකර්ම ලේකම් ගාමිණි මහින්දපාල ජොපියස් මහතා, පළාත් කෘෂිකර්ම අධ්යක්ෂිකා එස්.පී,ඒ.එම් ගුණවර්ධන මහත්මිය ඇතුලු නිළධාරීන් සහභාගි විය.
ஊவா மாகாண விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிதுனுவெவை சேவைக்கால பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் விவசாயத் தொழில்நுட்ப கண்காட்சியில் கலந்துகொண்டபோது…
‘முறையான பயிற்சியின் மூலம் விவசாய அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் கீழ், ஊவா மாகாணத்திற்கு உரிய தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி, விவசாயிகளின் விவசாய அறிவு, திறன்கள் மற்றும் மனோபாவங்களை மேம்படுத்தி, விவசாயத்தின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்து, விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில், பழ பயிர்ச்செய்கை, மலர் பயிர்ச்செய்கை, காய்கறி பயிர்ச்செய்கை, தாவர பயிர்ச்செய்கை, கரிம உற்பத்திகள், பாதுகாப்பான பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, திசு வளர்ப்பு மற்றும் காளான் உற்பத்தி ஆய்வகம், உருளைக்கிழங்கு உற்பத்தித் துறை, கோழி வளர்ப்பு, மண் வேதியியல் பற்றிய அறிவு, அணுகுமுறைகளை வழங்குவதற்காகப் பல கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் திருமதி. ஆர்.எச்.சீ. பிரியந்தி, ஊவா மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. எஸ்.பி. ஏ.எம். குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.