ඌව පළාත් සිවිල් ආරක්ෂක කමිටු රැස්වීම අද දින පළාත් සභා ශ්රවණාගාරයේදී පවත්වන ලදී.
මෙහිදී නීතිය හා සාමය, මහජන ආරක්ෂාව යටතේ මත්ද්රව්ය, රිය අනතුරු, ළමා අපචාර හා කාන්තා හිංසන, ත්රස්තවාදී ක්රියා යනාදී තොරතුරු පිළිබඳවත්, වන අලි ගැටලු සහ වන අලි හානි අවම කිරීමට ගෙන ඇති ක්රියාමාර්ග, දැනට පවතින කාළගුණික තත්ත්වය මත ඇතිවන හදිසි ආපදා තත්ත්වය කළමනාකරණය කිරීම ඇතුළු සිවිල් ආරක්ෂක කමිටු රැස්වීමට අදාළව කරුණු රැසක් පිළිබඳව තොරතුරු, දත්ත හා නිරීක්ෂණ ඉදිරිපත් කළහ. තවද ත්රිවිධ හමුදා ප්රධානීන් අවධාරණය කළේ තමන් සෑම විටම ශ්රී ලංකා පොලිසිය හා බුද්ධි අංශ සමඟ සමීපව කටයුතු කරන බවය. එසේම සියලු රාජ්ය ආයතන පළාතේ ආරක්ෂක තත්ත්වය තහවුරු කරලීම පිණිස සම්බන්ධ කර ගැනීමට තමන් කටයුතු කරන බවද ඔවුහු පෙන්වා දුන්හ.
මෙම අවස්ථාවට ඌව පළාත් සභාවේ ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය සහ ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී.ප්රියන්ති මහත්මිය, බදුල්ල හා මොණරාගල දිස්ත්රික් අතිරේක ලේකම්වරුන්, බදුල්ල, බණ්ඩාරවෙළ, මොණරාගල, තංගල්ල සහ අම්පාර ජේෂ්ඨ පොලිස් අධිකාරිවරුන්, 112,121 බලසේනා මූලස්ථානයේ බලසේනාධිපතිවරුන්, දියතලාව ගුවන් හමුදාවේ අණදෙන නිලධාරී ඇතුළු රජයේ ආයතන ප්රධානීන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஊவா மாகாண சபை கேப்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பின் கீழ் போதைப்பொருள், விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள், காட்டு யானை பிரச்சனைகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், தற்போதைய காலநிலை காரணமாக எழும் அவசர சூழ்நிலைகளின் முகாமைத்துவம் உள்ளிட்ட சிவில் பாதுகாப்புக் குழுவுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் தரவுகளுடன்
விரிவாக் கலந்துரையாடப்பட்டது. மேலும் இலங்கை பாதுகாப்புத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் எப்போதும் தாம் நெருக்கமாக பணியாற்றுவதாகத் தெரிவித்த முப்படைகளின் பிரதானிகள், மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து அரச நிறுவனங்களுடனும் இணைந்து தேவையான நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளர் தமயந்தி பரணகம மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, பதுளை மற்றும் மொனராகலை மேலதிக மாவட்டச் செயலாளர்கள், பதுளை, பண்டாரவெல, மொனராகலை, தங்கல்ல, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 112,121 படைப்பிரிவுகளின் தளபதிகள், தியத்தலாவ விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.