අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමාගේ ‘සෞභාග්යයේ දැක්ම’ ප්රතිපත්ති ප්රකාශයට අනුව ක්රියාත්මක වන රටේ කෘෂිකර්ම කටයුතු සම්පූර්ණයෙන්ම කාබනික පොහොර භාවිතයෙන් සිදුකිරීම සඳහා, පළාත් මට්ටමින් කාබනික පොහොර නිෂ්පාදනය කිරීම හා ප්රවර්ධනය කිරීම පිළිබඳව සාකච්ඡාවක් අද දින ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේදි පවත්වන ලදී.
මෙහිදී ඌව පළාත තුළ කාබනික පොහොර නිෂ්පාදනය හා ප්රවර්ධනය කිරීම සම්බන්ධ දැනට ක්රියාත්මක කරගෙන යනු ලබන වැඩපිළිවෙළ සම්බන්ධයෙන් පළාත් ගොවිජන සංවර්ධන සහකාර කොමසාරිස් සහ පළාත් කෘෂිකර්ම අධ්යක්ෂක විසින් කරුණු ඉදිරිපත් කරන ලදී.
නිෂ්පාදනය කරනු ලබන කාබනික පොහොරවල ප්රමිතිය, නිෂ්පාදනය වැඩිකිරීම සහ ඉදිරියේ දී එන මහ කන්නය සඳහා අවශ්ය පොහොර ලබාදීම පිළිබඳව විශේෂ අවධානය යොමු විය.
මෙම අවස්ථාව සඳහා බදුල්ල නගරාධිපති ඩබ්ලිව්.ඩී. ප්රියන්ත අමරසිරි මහතා, බණ්ඩාරවෙල නගරාධිපති ජනක නිශාන්ත රත්නායක මහතා, ප්රදේශ සභාව වල සභාපතිවරුන්, පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, පළාත් පාලන අමාත්යංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, නියෝජ්ය ප්රධාන ලේකම් (ක්රම සම්පාදන) එම්.එම්. ආනන්ද විජිතකුමාර මාපා, පළාත් කෘෂිකර්ම අමාත්යංශයේ ලේකම් ආර්.එම්.ටී.බී. හාතියල්දෙණිය මහතා, ගොවිජන සංවර්ධන සහකාර කොමසාරිස්, පළාත් කෘෂිකර්ම අධ්යක්ෂක, පළාත් සත්ත්ව නිෂ්පාදන අධ්යක්ෂක ඇතුළු නිලධාරීන් සහභාගී විය.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் நாட்டின் அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் சேதனப் பசளை பயன்படுத்துவது தொடர்பில், மாகாண மட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி மற்றும் அதனை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊவா மாகாணத்தில் சேதனப் பசளை உற்பத்தி மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கமநல அபிவிருத்திக்கான மாகாண உதவி ஆணையாளர் மற்றும் மாகாண விவசாயப் பணிப்பாளரினால் தெளிவூட்டப்பட்டது.
உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையின் தரம், உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பெரும் போக விவசாய உற்பத்திகளுக்குத் தேவையான பசளைகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பதுளை நகர மேயர் பிரசன்ன அமரசிறி, பண்டாரவளை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பிரதேச சபைகளின் தலைவர்கள், பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) எம்.எம். ஆனந்த விஜயகுமார மாபா, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பீ. ஹாதியல்தெனிய, கமநல அபிவிருத்திக்கான மாகாண உதவி ஆணையாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.