ඌව පළාතේ ඉදිරි වසර තුනක් සදහා වන මධ්යකාලීන ඒකාබද්ධ තිරසර සංවර්ධන සැලසුම් ඊයේ දින එළිදක්වන ලදී.
පළාත් නියෝජ්ය ප්රධාන ලේකම් (ක්රමසම්පාදන) කාර්යාලය මගින් ප්රකාශිත මෙම මධ්යකාලීන ඒකාබද්ධ තිරසර සංවර්ධන සැලසුම්දී, ඉදිරි වසර තුනක් තුල පළාතේ සිදුකිරීමට යෝජිත නව ආයෝජන අවස්ථා සහ ව්යාපෘතීන් අන්තර් ගත කොට තිබේ. රජයෙන් ලැබෙන ප්රතිපාදන වලින් සහ නව ආයෝජන ලබා ගැනීම තුලින් මෙහි වැඩසටහන් ක්රියාත්මක කිරීමට නියමිතය.
අධ්යාපනය, ග්රාමීය විදුලිබල, ග්රාම සංවර්ධන, ඉඩම්, පළාත් පාලන, මුල් ළමා විය සංවර්ධනය, බටහිර වෛද්ය, දේශීය වෛද්ය, පරිවාස හා ළමා රක්ෂක, සමාජ සේවා, වනිතා කටයුතු, කෘෂිකර්ම, නිෂ්පාදන, වාරිමාර්ග, මිරිදිය ධීවර, පළාත් මාර්ග, සමූපකාර, වතු යටිය සල පහසුකම්, නිවාස, ජල සම්පාදන, ක්රීඩා, ප්රවාහන, කුඩා කර්මාන්ත, සංස්කෘතික, සංචාරක සහ යෞවන කටයුතු පිළිබඳ මධ්යම කාලීන සංවර්ධන සැලසුම් මෙහි අන්තර්ගත වේ.
ජාතික තලයේ සංවර්ධන ඉලක්ක මෙන්ම තිරසාර සංවර්ධන ඉලක්ක සඳහා අනුගත වෙමින් මෙම සැලසුම් සකස් කර ඇති අතර, මෙහි ක්රියාකාරීත්වය නියාමනය, සම්බන්ධීකරණය මෙන්ම අධීක්ෂණය සඳහා වෙනම වැඩපිළිවෙලක් හඳුන්වා දී ඇත.
යුරෝපානු සංගමයේ (EU) මූල්ය ආධාර යටතේ, UNDP ආයතනය පළාත් පාලන ආයතන වල ධාරිතා සංවර්ධනය කිරීමේ (CDLG) ව්යාපෘතිය මගින්, මෙම තුන් වසරක මධ්යම කාලීන ඒකාබද්ධ තිරසර සංවර්ධ සැලසුම නිර්මාණය කිරීම සඳහා මූල්යමයමය හා තාක්ෂණික අනුග්රහය ලබාදී තිබීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට ඌව පළාත් සභාවේ ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය සහ ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී.ප්රියන්ති මහත්මිය, පළාත් ප්රධාන අමාත්යාංශවල ලේකම්වරුන් ඇතුළු රජයේ නිලධාරීන්, UNDP පළාත් පාලන විශේෂඥ බුද්දික උදයජිත් මහතා, CDLG/UNDP ව්යාපෘතියේ පළාත් සම්බන්ධීකාරක සිහාන් සරූක් මහතා ඇතුළු UNDP ආයතනයේ නිලධාරීන් එක්ව සිටියහ.
ஊவா மாகாணத்தின் அடுத்த மூன்று வருடங்களுக்கான இடைக்கால ஒருங்கிணைந்த நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த இடைக்கால ஒருங்கிணைந்த நிலையான அபிவிருத்தித் திட்டங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளது. அரசிடம் இருந்து பெறப்படும் ஒதுக்கீடுகள் மூலமாகவும், புதிய முதலீடுகள் மூலமாகவும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
கல்வி, கிராமப்புற மின்மயமாக்கல், கிராமப்புற மேம்பாடு, நிலங்கள், உள்ளூராட்சி, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாடு, மேற்கத்திய மருத்துவம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக சேவைகள், மகளிர் விவகாரம், விவசாயம், உற்பத்தி, நீர்ப்பாசனம், நன்னீர் மீன்பிடி, மாகாண சாலைகள், கூட்டுறவு, தோட்ட உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, நீர் வழங்கல், விளையாட்டு, போக்குவரத்து, சிறு தொழில்கள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பிலான இடைக்கால ஒருங்கிணைந்த நிலையான அபிவிருத்தித் திட்டங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.
தேசிய மட்ட அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணங்க இத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பனவற்றுக்குத் தனியான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதி உதவியுடன், UNDP நிறுவனத்தின் CDLG வேலைத்திட்டத்தினால் இந்த மூன்று வருடங்களுக்கான இடைக்கால ஒருங்கிணைந்த நிலையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளர் தமயந்தி பரணகம மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, மாகாண பிரதான அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், UNDP உள்ளூராட்சி நிபுணர் புத்திக உதயஜித், CDLG/UNDP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக் உள்ளிட்ட UNDP நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.