රටේ පවතින ආර්ථික අභියෝග මැදින් නිදහස් අධ්යාපනය ශක්තිමත් කිරීමට ගත හැකි ක්රියාමාර්ග පිළිබඳව සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
අධ්යාපන අමාත්යාංශයේ දී පැවැත්වීමට නියමිත සාකච්ඡාවට සමගාමීව, ඌව පළාත තුල ජාතික සහ පළාත් මට්ටමේ පාසල්වල අධ්යාපන පද්ධතිය ශක්තිමත් කිරීමට ගත හැකි ක්රියාමාර්ග හා මග පෙන්වීම් පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළ අතර, අධ්යාපන ක්ෂේත්රය මුහුණ දෙන ගැටළු පිළිබඳව ද සාකච්ඡා කරන ලදී.
එමෙන්ම පාසල හා විභාග සුමටව පවත්වාගෙන යාමට ගතයුතු ක්රියාමාර්ග සහ පාසල් වලට ළමුන් ප්රවාහනය කිරීමේදී තිබෙන ගැටලු සහ ඒ සඳහා විසදුම් ලබා දිය හැකි ක්රමවේද පිළිබඳ මෙහිදී අවධානය යොමු විය.
මෙම අවස්ථාවට පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් අධ්යාපන අධ්යක්ෂ ඩී.එම් රත්නායක මහතා ඇතුළු නිළධාරීන් එක්ව සිටියහ.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள கலந்துரையாடலை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் உள்ள தேசிய மற்றும் மாகாண மட்டப் பாடசாலைகளின் கல்வி முறையை வலுப்படுத்த முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கல்வித்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்ய முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்விப் பணிப்பாளர் டீ.எம். ரத்நாயக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.