ඩෙංගු මර්ධනය පිලිබඳ පළාත් මෙහෙයුම් කමිටු රැස්වීම් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී පළාත තුළ ඩෙංගු මර්දනය කිරීම සඳහා ක්රියාත්මක වන ආරක්ෂක පද්ධතිය පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළ අතර, තවදුරටත් ඩෙංගු උවදුරෙන් ඌව පළාත ආරක්ෂා කිරීම සඳහා ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳව නිලධාරීන්ට උපදෙස් ලබා දුන්නෙමි.
මදුරුවන් බෝවිය හැකි ස්ථාන පරීක්ෂා කර පිරිසිදු කිරීමේ කටයුතු සඳහා රාජ්ය ආයතන, පාසල් ඇතුළු අනෙකුත් ආයතන ප්රධානීන් දැනුවත් කිරීම, නාගරිකව හා ග්රාමීයව සියලු නිවාස සහ වෙළෙඳ සැල් පරිශ්ර පරීක්ෂාවට ලක් කිරීම, ශබ්ද විකාශන යන්ත්ර මඟින් දැනුවත් කිරීම්, ඩෙංගු රෝගීන් හඳුනා ගන්නා ප්රදේශ වෙත ගොස් අවට ස්ථානවල ඩෙංගු රෝග වාහක මදුරුවන් විනාශ කිරීම, ස්ථානීය පරීක්ෂාවන් සිදු කර මදුරු කීටයන් හඳුනා ගැනීම, නිවාස හා ආයතන පරිශ්ර පිරිසිදුව පවත්වා ගෙන යාමට අපොහොසත් වන්නන් සඳහා නීතිමය ක්රියාමාර්ග ගැනීම ආදිය මඟින් ඩෙංගු ව්යාප්තිය පාලනයට අවශ්ය පියවර ගැනීම සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන ලදී.
ඩෙංගු මර්දන වැඩසටහන සාර්ථක කර ගැනීමට සෞඛ්ය අංශවල මැදිහත්වීම පමණක් ප්රමාණවත් නොවන බැවින් ඒ සඳහා ජනතාවගේ ද සහාය උපරිමයෙන් අවශ්ය බව සෞඛ්ය අංශ වැඩිදුරටත් අවධාරණය කරයි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය, බදුල්ල හා මොණරාගල දිස්ත්රික් ලේකම්වරුන්, ඌව පළාත් අධ්යාපන ලේකම්, පළාත් සෞඛ්ය අංශ නිලධාරීන්, පළාත් කොමසාරිස්වරුන්, පළාත් ජේෂ්ඨ පොලිස් අධිකාරිවරුන්, 112 බලසේනා මූලස්ථානයේ බලසේනාධිපති, දියතලාව ගුවන් හමුදාවේ අණදෙන ඇතුළු, රජයේ ආයතන ප්රධානියෙක් එක්ව සිටියහ.
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
நுளம்புகள் பெருகும் இடங்களைச் சோதனை செய்து சுத்தம் செய்வது தொடர்பில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பிரதானிகளும் தெளிவூட்டல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடை வளாகங்களைச் சோதனை செய்தல், ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புக்களை வழங்குதல், டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை அழித்தல், இடங்களைக் கண்டறிந்து கொசுப்புழுக்களை அடையாளம் காணல், வீடுகள் மற்றும் நிறுவன வளாகங்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதேவேளை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றியடையச் சுகாதார திணைக்களத்தின் தலையீடு மட்டும் போதாது எனவே, மக்களின் ஆதரவும் தேவை எனச் சுகாதார அதிகாரிகள் மேலும் வலியுறுத்துகின்றன.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 112 படைப்பிரிவுகளின் பிரதானி, தியத்தலாவ விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.