කෘෂි වගා කටයුතු සඳහා දිලීරනාශක, පොහොර, වල්නාශක, කෘමිනාශක නොමැති නිසා කෘෂි බෝග හානි සිදුවීම සම්බන්ධයෙන් බොරලන්ද, භවරිග්මල්වල ගොවි සංවිධානය මඟින් සංදේශයක් බාර දෙනු ලැබීය.
මෙහිදී වැලිමඩ ප්රදේශයේ ඌව පරණගම, කැප්පෙටිපොළ, බොරලන්ද, බෝගහකුඹුර, පාදිනාවල, විදුරුපොල, පිටපොල, දියතලාව, බණ්ඩාරවෙල යන ප්රදේශ වල බහුලව වගා කරන අර්තාපල්, තක්කාලි ඇතුළු අනෙකුත් සියලු බෝග වගා කිරීමේදී ගොවිතැනට අත්යවශ්යම වන ඉහත සඳහන් කෘෂි රසායනික ද්රව්ය හා පොහොර ආදීය නොමැතිකමින් වගා කටයුතු කර ගත නොහැකිව දැනට වගා කරඇති වගාවන් විවිද රෝගයන්ගෙන් හා පලිබෝධකයන්ගෙන් ආරක්ෂා කරගත නොහැකිව ඉතා අසරණ තත්ත්වයට පත්ව ඇති බව ගොවි ජනතාව විසින් දැනුවත් කරන ලදී.
මේ පිළිබඳව සානුකම්පිතව සලකා බලා විසඳුමක් ලබාදෙන ලෙස විෂය භාර අමාත්යවරයාව හා අතිගරු ජනාධිපතිතුමාව දැනුවත් කරන ලදී.
මෙම අවස්ථාවට වංගිය කුඹුර ශ්රී සුභද්රාරාමයේ විහාරාධිපති කන්දේ පුහුල්පොළ කෝලිතා හිමි, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් කෘෂිකර්ම අධ්යක්ෂක එස්. බී. එම්.ඒ. ඒම්. ගුණවර්ධන මහත්මිය ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான பூஞ்சைக் கொல்லிகள், உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாததால் விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து பொரலந்தா, பவரிக்மல்வல விவசாயிகள் சங்கத்தினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதில் வெலிமடை பிரதேசத்தின் ஊவா பரணகம, கெப்பெட்டிபொல, போரலந்த, பதினாவல, விதுருபொல, தியத்தலாவ, பண்டாரவளை ஆகிய பிரதேசத்தில் பரவலாகப் பயிரிடப்படும் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி உள்ளிட்ட அணைத்து விவசாய நடவடிக்கைகளுக்குப் பிரதானமாகத் தேவைப்படும் மேற்குறிப்பிட்ட விவசாய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் இல்லாமைக்காரணமாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலும், தற்பொழுது பயிரிடப்பட்டுள்ள பயிர்களை பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாமலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை அனுதாபத்துடன் பரிசீலித்துச் சிறந்த தீர்வை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரையும், கௌரவ ஜனாதிபதியையும் தெரியப்படுத்தினேன்.
இந்த சந்திப்பில் வங்கிய கும்புர ஸ்ரீ சுதத்ராராமய விகாரையின் விகாராதிபதி கந்தே புஹுல்பொல கோலித தேரர், ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.எம்.ஏ.எம். குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.