වැලිමඩ-ඌවපරණගම උමා ඔයෙන් වෙන්වෙන ගිරාබේ පාලම අළුතින් ඉදිකිරීමට වැඩ ආරම්භ කිරීම පසුගිය 20 වන දින සිදුවිය,
මෙම පාලම ඉදිකිරීම සඳහා ඌව පළාත් සභාව විසින් රුපියල් මිලියන 160ක මුදලක් වෙන්කර තිබේන අතර, මාස හයක කාලයකින් පාලමේ වැඩ නිම කිරීමට නියමිතය.
1962 වසරේ පළමුවරට ඉදිකර තිබෙන මෙම පාලම, අද වනවිට යකඩ දිරාපත්ව, ආවරණ වැට කැඩී, පාලමේ බැමි පුපුරා කඩා වැටීමේ අවදානමක පසුවෙයි.
මෙම පාලමෙන් දිනකට එළවලු ප්රවාහනය කරන වාහන විශාල ප්රමාණයක ගමන් කරන අතර, ඌවපරණගම ප්රදේශයේ ගොවි පවුල් දහස් ගණනක් කැප්පෙටිපොළ ආර්ථිකය වෙළද මධ්යස්ථානයට එළවළු ප්රවාහනය කිරීම සඳහා මෙම පාලම භාවිතා කරනු ලබයි.
පාලම ඉදිකිරීමේ වැඩ ආරම්භ කිරීම සදහා වරාය හා සිවිල් ගුවන්සේවා අමාත්ය නිමල් සිරිපාලද සිල්වා මැතිතුමා, ප්රාදේශීය දේශපාලන අධිකාරිය ඇතුළු ප්රදේශවාසීන් එක්ව සිටියහ.
வெலிமடை – உவபரணகம கிராபே பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 20ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஊவா மாகாண சபையினால் 160 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இப்பாலத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1962ம் ஆண்டு முதன்முறையாகக் கட்டப்பட்ட இந்த பாலம், தற்பொழுது கம்பிகள் உக்கிய நிலையிலும், தடுப்புச்சுவர் உடைந்தும், இடிந்து விழும் அபாயத்திலும் காணப்படுகிறது.
இந்த பாலத்தின் ஊடாக தினமும் அதிகளவான மரக்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பயணிப்பதுடன், உவபரணகம பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் கப்பேட்டிபொல பொருளாதார வர்த்தக நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் செல்வதற்கும் இந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வா, உள்ளுர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.