ඌව පළාතේ වතු ආශ්රිත ජනතාවගේ, විශේෂයෙන්ම දරුවන්ගේ අධ්යාපනය, සෞඛ්ය හා යටිතල පහසුකම් වැඩිදියුණු කිරීම පිළිබඳ මුලික වටයේ සාකච්ඡාවක් බදුල්ල හෙරිටේජ් රිසෝට්හිදී පවත්වන ලදී.
යුනිසෙෆ් ආයතනයේ මූලිකත්වයෙන් පවත්වන ලද මෙම සාකච්ඡාවේදී පළාත් සභාව හා වතු පාලන අධිකාරිය ඇතුළු සියලු කාර්යාංශ වල සහයෝගය මත මධ්ය කාලීන සැලැස්මක් සකස් කිරීම පිළිබඳව සාකච්ඡා කෙරුණි.
ඌව පළාත තුල වතු ආශ්රිත පාසල් 177 ක් පවතින අතර, සිසුන් 41,000 ක් පමණ අධ්යාපනය හදාරනු ලබයි.
මෙම අවස්ථාවට යුනිසෙෆ් ආයතනයේ අධ්යාපන අංශයේ ප්රධානීන් තකාහෝ ෆුකාමි (Thakaho Fukami) මහත්මිය, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ද්යා අඹන්වල මහත්මිය, පළාත් අධ්යාපන අධ්යක්ෂක, මුල් ළමාවිය සංවර්ධන අධිකාරියේ අධ්යක්ෂක, පළාත් සෞඛ්ය අධ්යක්ෂක, පරිවාස හා ළමාරක්ෂක සේවා අංශයේ කොමසාරිස්, වතු කළමනාකරුවන් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
ஊவா மாகாணத்தில் காணப்படும் பெருந்தோட்டங்களைச் சார்ந்து வாழும் சமூகத்தின், விசேடமாக சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் உற்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடல் பதுளை ஹேரிடேஜ் ரிஷோர்ட்டில் நடைபெற்றது.
யுனிசெப் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண சபை மற்றும் பெருந்தோட்ட அதிகார சபை உட்பட அனைத்து பணியகங்களின் ஆதரவுடன் நடுத்தர கால திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஊவா மாகாணத்தைச் சார்ந்ததாக 177 பெருந்தோட்டப் பாடசாலைகள் காணப்படுவதுடன், 41,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்த கலந்துரையாடலில் யுனிசெப் அமைப்பின் கல்வித் துறை பிரதானி தகாஹோ புகாமி (Thakaho Fukami), ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் பிரிவின் ஆணையாளர், பெருந்தோட்டத்துறை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.