ජාත්යන්තර කාන්තා දිනයට සමඟාමීව බාලිකා පාසල් 08ක් සහ මිශ්ර පාසල් 02ක් ජාතික පාසල් පද්ධතියට එක් කිරීම යටතේ, බිබිල යශෝධරා බාලිකා විද්යාලය ජාතික පාසලක් ලෙස නම් කිරීමේ උත්සවය ඊයේ දින පවත්වන ලදී.
මෙම පාසල් දහය ජාතික පාසල් බවට පත්කිරීමේ නාම පුවරු අග්රාමාත්යතුමාගේ සුරතින් අරලියගහ මන්දිරයේ සිට අන්තර්ජාල තාක්ෂණය ඔස්සේ එකවර නිරාවරණය කෙරිණි.
බෙලිඅත්ත පුවක්දණ්ඩාව ධම්මපාල බාලිකා විද්යාලය, බිබිල යශෝධරා බාලිකා විද්යාලය, දොම්පේ දේවි බාලිකා විද්යාලය, කල්මුණේ මහමුද් කාන්තා විද්යාලය, කැකිරාව විද්යාර්ථ මහා විද්යාලය, කෑගල්ල ස්වර්ණ ජයන්ති මහා විද්යාලය, හැටන් ශාන්ත ගේබ්රියල් බාලිකා විද්යාලය, පේදුරුතුඩුව මෙතෝදිස්ත උසස් බාලිකා විද්යාලය, දංකොටුව බෞද්ධ බාලිකා විද්යාලය සහ වලහන්දූව ජනාධිපති බාලිකා විද්යාලය මෙලෙස ජාතික පාසල් පද්ධතියට එක්විය.
ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතාගේ රට හදන “සෞභාග්යයේ දැක්ම” මත ජාතික පාසල් දහසක් වැඩසටහන යටතේ මෙම පාසල් 10, ජාතික පාසල් බවට පත් කිරීමත් සමග, රට පුරා ජාතික පාසල් සංඛ්යාව 395ක් බවට පත් වේ.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 08 மகளிர் பாடசாலைகளையும் 02 கலவன் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகள் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வுக்கு அமைய, பிபில யஷோதரா மகளிர் பாடசாலையைத் தேசிய பாடசாலையாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த பத்து பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் கௌரவ பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து இணையத் தொழில்நுட்பம் ஊடாக ஒரே தடவையில் திறந்துவைக்கப்பட்டன.
இதற்கமைய பெலிஅத்த புவக்தண்டாவ தம்மபால மகளிர் பாடசாலை, பிபில யஷோதரா மகளிர் பாடசாலை, தொம்பே தேவி மகளிர் பாடசாலை, கல்முனை மஹமுத் மகளிர் பாடசாலை, கெகிராவ வித்யார்த்த மகா வித்தியாலயம், கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், ஹட்டன் கெப்ரியல் மகளிர் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்ட் உயர் மகளிர் பாடசாலை, தங்கொடுவ பௌத்த மகளிர் பாடசாலை மற்றும் வலஹந்துவ ஜனாதிபதி மகளிர் பாடசாலை ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் பிரகாரம், ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த 10 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.