ඌව පළාත තුළ ක්රියාත්මක රාජ්යව නොවන සංවිධානයක් වන ඌව ශක්ති පදනම විසින් සංවිධානය කරන ලද, කොවිඩ් 19 වසංගතයේ තුන්වෙනි රැල්ලෙන් බලපෑමකට ලක් වූ වැඩිහිටි නිවාස, ළමා නිවාස වලට සහන මල්ල ලබාදීමේ වැඩසටහන බදුල්ල උදය ළමා නිවාස පරිශ්රයේදී පවත්වන ලදී.
කොවිඩ් වසංගතය සඳහා වූ ජනාධිපති කාර්ය සාධක බලකායට ශක්තියක් වෙමින් සිවිල් සංවිධානයක් වශයෙන් ක්රියාත්මක කරන මෙම වැඩසටහන යටතේ බදුල්ල දිස්ත්රික්කයේ ළමා නිවාස 14ක්, වැඩිහිටි නිවාස 07ක් හා පුනරුත්ථාපන මධ්යස්ථාන සඳහා රුපියල් මිලියන තුනක වටිනාකමින් යුත් වියළි ආහාර සහ සෞඛ්යය ආරක්ෂිත කට්ටල ලබා දෙන ලදී.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, ඌව ශක්ති පදනමේ සභාපති නඩේෂන් සුරේෂ් මහතා ඇතුළු පිරිසක් සහභාගි විය.

ஊவா மாகாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற அமைப்பான ஊவா சக்தி அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, கொவிட் 19 வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பதுளை உதய சிறுவர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.
கொவிட் வைரஸ் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் பணிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஒரு சிவில் அமைப்பாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள 14 சிறுவர் இல்லங்கள், 07 முதியோர் இல்லங்கள் மற்றும் புனர்வாழ்வு மையங்களுக்காக சுமார் மூன்று மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உலர் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகமம் ஊவா சக்தி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் நடேசன் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.